காதல்

                                                                 
 துணை 

கண்கள் கலங்கும் போது இரு                          
கை கொண்ட துணை வேண்டும்.                
இதயம் கலங்கும்  போது
மனம் கொண்ட துணை வேண்டும்.

கால் தடு மாறும் போது
கை கொண்ட துணை வேண்டும்.
கண் பார்வை குறையும் போது
இரு கால்  கொண்ட துணை வேண்டும்.

இதயம் தடுமாறும் போது
புத்தி கொண்ட  துணை வேண்டும்.
என் வாழ்க்கை தெரிவின் போது
நீயே துணையாக வேண்டும்.
                                                                    by:
                                                                         mirasia

விழி பேசி

விழி எனும் கை பேசி அழைப்பது
என் விழி எனும் கை பேசியை அழைப்பது
கண் வலி வந்த அழைப்பு
இதயம் வரை சென்று விட்டது

விழியே உன் ஒலி -​ என்
விழி மட்டும் அறிவது ஏன்?
நீ தந்த தவறிய அழைப்பால்
என்  இதயம் தவறி விட்டது.

ஒளிவு மறைவு பார்வையை பார்த்த
என் இதழில் எழுந்தது புன் சிரிப்பு
உன் விழி பேசி என் இதயத்தில்
எழுந்தது படபடப்பு

உனக்குள் என்னையும்
எனக்குள் உன்னையும்
உணர வைப்பது  நம் விழிகள்.
                                                                   by:
                                                                            mirasia
உயிர்

உயிரை பிரிய மறுகின்றேன்
 உன்னை பார்த்த பின்
உயிரும் உடலும் ஒன்றுதான்
அதுதான் உன் நினைவுகள்.

உனக்கும் எனக்கும் மட்டுமே
உரிய தொடர்பு சாதனம் ஒன்றுதான்
அது நம் நினைவுகள் மட்டும்தான்
நம்மை அருகே அமர வைப்பது
நம் நினைவுகள்,
தொலைவாய் அனுப்புவது
நம் உறவுகள்.

என் உடலுக்கும் உயிருக்கும்
ஒரே பெயர் அது உன் பெயர் .
இன்று எனக்கு புரியாது புதிர்,
நன் உன் அருகில் இருகின்றேனா?
 நீ என் அருகில்  இருக்கின்றாயா ?

உனக்கும் எனக்கும் உறவாய் இருப்பது,
 நம் விழிகள்
உன்னையும் என்னையும்,
உறைய வைப்பதும்,
நம் விழிகள்.                                        
                                    by:
                                          mirasia

விழி வழி 

உன் விழி  யின் ஒளியில் தெரியும் பாதையில்
நான் என் பாதம் வைக்க விரும்புகிறேன்
ஆனால் முடியவில்லை
பெண்மை என்னை தடுக்கிறது

இதயம் உன் வழியை நாடுகிறது
மூளை எதிர் வழி தேடுகிறது,
இதயத்துக்கும் மூலைகும் இடையில் - உன்
மௌனம் என்னை  வாட்டுகிறது.
நீ அறிய விரும்புகிறேன் விழி வழியே
                                                                                by:
                                                                                   mirasia

காதலித்து பார் 

சிறு குழந்தையின் இதய துடிப்பு,
வீதத்தை நீ அறிவாய்.
நாடியின் நடுக்கத்தை நீ
உணர்வாய் -நாயகியே
காதலித்து பார்

உலகத்து கவலை உன்னில்
இல்லாததை அறிவாய்.
உலகத்திலே நீ இல்லாததை நீ
உணர்வாய் - நாயகியே
காதலித்து பார்

கணமாய் இருந்த உன்
இதயம் காற்றில்  பறக்கும்
துப்பட்டாவாய்  பறக்க
காண்பாய் -நாயகியே
காதலித்து பார்

கருவறையின் கத கதப்பை - மீண்டும்  
 மீண்டும்   உணர்வாய் 
 கண்ணாளனின் கைகளில் -
நாயகியே,
காதலித்து பார்.
                                     by:
                                         mirasia
அவன் அறியா மடந்தை 

 அவன் அவனின் காதலை
அவளிடம் கூர  மறுக்கிறான்.
அவள் மறுத்து விடுவாளோ?
என்றதால் அல்ல,
அவளை மறக்க வைத்து விடுவாளோ?
என்றதால்.

அவள் முன் செல்கிறான்  அடிகடி
அவள் கண்களில் காதலை
அறிந்து கொள்ள முடியுமா? என்று என்னி
அவள் தலையை நிமிர்த்தி
பார்க்க மறுக்கிறாள் அவனை.

 அவனோ அறிய மடந்தை
அவள் பார்பதெல்லாம் - அவனாய்
தெரிவதால் அவள் எதையும்
பார்க்க மறுக்கின்றாள் என்பதை
அறியா மடந்தை அவன்.

                                                                by:
                                                                mirasia       
           

உன் வெட்கத்தால்  
நீல வானில் ஓடும் மேகமாய்
நீ என்னை பார்த்து
தலை குனிந்து வெட்கத்துடன்
ஓடினாய் பெண்ணே.

உன் வெட்கம் என்னை
வேறு பெண்ணிடம் திரும்ப
மறுக்க வைக்கிறது
மதி மயக்கினேன் உன்னால் இன்று

உலகத்து பெண்களிடம் உன்னுடன்
மட்டுமே உரையாட விரும்புகிறேன்
உன்னை விரும்பிய
 நாளில் இருந்து.
                                        by:
                                             mirasia


உன் அருகில்
கடலோரத்தில் இருந்த போது கூட
என் எண்ணத்தில் கவிதை எழவில்லை
உன் கண் பார்த்த அந்த நிமிடம்
கவிதையே  கடலாய் எழுகின்றது.

காதலின் மொழி மௌனமோ? -  என்று
 என்ன தோன்றுகின்றது,- நீ
என் அருகில் இருக்கும் போது
இது உண்மைதானா?  அன்பே

உதிரம் கூட உறைகின்றது அன்பே
உன் பார்வையின் வெப்பத்தில்,
உடல் குட உஷ்ணம் இழக்கின்ரது
உன் இதய துடிப்பின் சத்தத்தில்.
                                                                    by:
                                                                         mirasia


இதயம் பற்றியது 
பத்தினி பெண்ணின் பார்வையிலே
பச்சை மரம் கூட எரியும்
என்பதை மறுத்தேன்
இன்று வரை,

மறுக்க மாட்டேன்  இன்றிலிருந்து
இன்றுதானே - நான்
 உன் விழி பார்த்தேன்
எங்கனம் இனி மறுப்பேன்
என் இதயமே பற்றி விட்ட பின்
                                                                  by:
                                                                      mirasia

அநாதரவாய் ஆனேன் 
உடைந்த உளத்திலே உதிரம் உள்ளதடா
நீ எனை அறியவில்லை - என்று
கூரிய வார்த்தையால் - நான்
அநாதரவாய் ஆனேன்.
                                                       by:
                                                           mirasia

சூது செய்வார் 
உனக்கும் எனக்கும் இடையில்
ஒருவரும் வேண்டாம்
தூது என்ற பேரில்
சூது செய்வார்.

ஆச்சரியம்
என் கண்ணும் காதலால் கலங்கியது
என்ன ஆச்சரியம்!
இந்த காதல் என்னையும் கூட
தினற வயது விட்டதே.
                                                           by:
                                                                mirasia

காலம் முழுவதும் போதும்,
உன் நினைவு போதும் - நான்
உயிர் வாழ்ந்திட போதும்.
உன் பார்வை போதும், -என்
இதயம் துடித்திட போதும்.

என் இதயத்தில் நீ உள்ளாய்
என்ற வார்த்தை போதும்,
என் வாழ்கையின்
 தனிமை போக்கிட போதும்.

உன் நிழல் படம் ஒன்று போதும் ,
உயி இல்ல என் உடலுக்கு
புத்துயிர் அளித்து புது பொலிவுடன்
துள்ளிகுதித்திட  போதும்.

நீ என் மேல் கொண்ட அன்பு போதும்,
நீ என் அருகில் இல்லை என்பதால்
உருவான அழுகை
போக்கிட போதும்.

காற்றில் வந்த உன்வாசம்போதும்,
காலம் எல்லாம் காத்திருக்க போதும்
காதல் கொண்ட கன்னியின்
நெஞ்சுக்கு இவை எல்லாம் போதும்
காலம் முழுவதும் காத்திருக்க போதும்





No comments:

Post a Comment