நட்பு




நண்பா நான் கடந்து வந்த பாதையை
நண்பா நான் கடந்து வந்த பாதையை - நீ
நடந்து வருகின்றாய் - ஒன்றை
மறக்க நினைக்காதே  - அது
முடியாத காரியம் -நமக்கு -
அதனிடத்தில் மற்றொன்றை
வைக்க நினைத்துவிடு
பூக்கள் பூப்பதும் - பின்
வாடி உதிர்வதும் -இயல்பான
ஒன்று மரத்துக்கு - காதல்
வளர்வதும் பின் - அது
கரைகடந்து போவதும் - இயல்பான
ஒன்று வாழ்கைக்கு - பலரின்
காதல் திருமணத்தில் முடிகின்றது -சிலரின்
காதல் திருமணத்தில் துவங்குகின்றது
திருமணத்தில் துவங்கும் காதலுக்கு
ஆயுள் அதிகம் அவ்வளவும்தான் !
கவலையை விடு வாழ்கையை எடு
மீண்டும் ஒரு பூ பூக்கும் - பின்
அதுவும் உதிர்ந்து போகும் .

புதிரான உறவு
புதிரான ஓர் உறவு
புதிதான உறவு
பிரிவெனும் விதியை வென்ற உறவு
பிரிந்தவரையும் இணைக்கும் உறவு
பள்ளியில் தொடர்ந்த உறவு
பாடைவரை தொடரும் உறவு
வாழ்வில் இழந்திடாது உறவு
வான் எல்லையும் தாண்டிய உறவு
நட்பெனும் உறவு
நண்பன் எனும் உறவு
காதலும் சிலவேலை தடம்புரளும்
காதலை வென்று உயிர் வாலும் 
 நட்பெனும் உன்னத உறவு








என்றுமே தோழி நீயடி 
துடி துடித்த போது,
துணையாய் நின்றாய் .
சொந்தங்களை இழந்த போது,
சொந்தமாய் நின்றாய் .
தோல்வியை அறிந்த போது,
தேற்றரவாய்   ஆனாய்.

நீ இருந்த காலம்
நினைவுகளில் உள்ளதடி
நியங்களில் இன்று - நீ
இல்லயடி
ஆதரவாய் இருந்தவள்,
அநாதரவாய் ஆக்கி விட்டால் .
எது எவ்வாறாயினும் அன்பு தோழி,
என்றுமே தோழி நீயடி


நலமாய்  உள்ளது
நட்புடன் உறவாடிய நாட்கள்,
எண்ணி பார்க்க நலமாய்  உள்ளது.
நடமாடி திரிந்த வீதிகளிலும்,
நம் நினைவுகள் நலமாய் உள்ளது.

சற்றே கலங்குகிறேன்
நினைவுகளில் மட்டுமே ,
நாம் அருகில்  இருப்பதால்
நியங்களில்  தொலைவில் இருப்பதால்,
 

 நட்புடன் நலமாய் திரிந்தோம்
நண்பிகள் நாம் - இன்று
பிரிந்தும் பிரியாத நம் உறவில்
புது சுகம் உள்ளதடி அன்பு தோழிகளே.